Friday, May 17, 2024




Homeதமிழ்நாடுவீட்டுக்கு வாகனம் அனுப்பி மூதாட்டியை வாக்களிக்க ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையம் @ மதுரை

வீட்டுக்கு வாகனம் அனுப்பி மூதாட்டியை வாக்களிக்க ஏற்பாடு செய்த தேர்தல் ஆணையம் @ மதுரை

மதுரை: வாக்குச்சாவடிக்கு அழைத்து வர ஆட்கள் இல்லாததால் மூதாட்டி ஒருவர், தேர்தல் ஆணையத்துக்கு ஃபோன் செய்து உதவி கேட்டதால், தேர்தல் அதிகாரிகள் துரிதமாக வாகனம் ஏற்பாடு செய்து மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். வாக்களித்த பிறகு அவரை வீட்டுக்கு பாதுகாப்பாக கொண்டுபோய்விட்டனர்.

மதுரை மக்களவைத் தேர்தலில் வயது மூத்தோரான மீனாட்சியம்மாள் கோமதிபுரம் கொன்றை வீதியில் வசித்து வருகிறார். இவரால் வாக்குச்சாவடி நேரடியாக வந்து வாக்களிக்க இயலவில்லை. அவரை அழைத்து வர உடன் யாரும் இல்லை. அதனால் அவர் மதுரை மாவட்ட தேர்தல் ஆணையத்தின் உதவி மையத்திற்கு 1950 என்ற எண்ணிற்கு போன் செய்து தேர்தல் ஆணையம் வாக்களிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனம் மூலம் அவரது இருப்பிடத்திற்கு சென்று அவரது குடியிருப்புக்கு அருகே கே.புதூர் வண்டிப்பாதை அருகில் உள்ள பாத்திமா பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்து கொண்டு வாக்களிக்க வைத்தனர். வாக்களித்த பின் மீனாட்சியம்மாளை அதே வாகனத்தில் அவரது இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர். தேர்தல் ஆணையத்தின் இந்த துரித ஏற்பட்டாட்டால் தமிழகம் முழுவதும் ஏராளமான வாக்காளர்கள் பயனடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments